பாபநாசம் அருகே 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் 14-ஆம் ஆண்டு இரத்ததான முகாம் நிகழ்ச்சியில் ஏராளமான கலந்து கொண்டு குருதிகளை தானமாக வழங்கினர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே இராஜகிரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.

75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு,14-ஆம் ஆண்டு நடைபெற்ற இரத்ததான முகாமிற்கு மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் வரிசைமுகமது தலைமை வகித்தார்.

பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் முகாமினை துவங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். முகாமில் குடியரசு தினத்தை போற்றும் வகையில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களது குருதிகளை தானமாக வழங்கினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *