செய்தியாளர் வீ.முகேஷ்
இந்திய நாட்டின் 75 – வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, தருமபுரி சட்டமன்ற அலுவலகத்தில், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து, தேச தந்தை மகாத்மா காந்தி திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினார்.
இந்நிகழ்வில், நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரிபெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி, நகர செயலாளர்கள் கி.வெங்கடேசன், வே.சத்தியமூர்த்தி, அன்புமணி தம்பிகள் படை மாவட்ட செயலாளர் ரா.கார்த்திகேயன், சிறுபான்மைப் பிரிவு மாவட்ட செயலாளர் சையத்கலீம், நிர்வாகிகள் ஜெகன், வெங்கடேஷ் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.