வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 75 -வது குடியரசு தின விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்திய ஒன்றியத்தின் 75 -வது குடியரசு தினத்தை முன்னிட்டு, பள்ளி தலைமையாசிரியர் மு நாவளவன் முன்னிலையில், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கா செல்வம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக கௌரவ ஆலோசகர் பா. சிவனேசன், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் புலவர் சிவ. செல்லையன், பொருளாளர் எஸ் .ஆர். ராஜேஷ், இணை செயலாளர் எஸ். ரவிச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் நல்லம்பூர் கிருஷ்ணமூர்த்தி, சத்தியமூர்த்தி, பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், பெரிய பள்ளிவாசல் ஜமாத்தார்கள், பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் சு சுமத்ரா, துணைத் தலைவர் அ. சிவகாஞ்சனா, மேலாண்மை குழு உறுப்பினர் சேகர், ஆசிரியர் மன்ற செயலாளர் முதுகலை ஆசிரியர் ம. பூபதி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோம. மாணிக்கவாசகம், செயற்குழு உறுப்பினர் வி. சி. ராஜேந்திரன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளி இறுதி ஆண்டு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பட்டதாரி ஆசிரியை புவனேஸ்வரி தன் சொந்த செலவில் சிறப்பு பரிசுகள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் மு நாவளவன் நூறு சதவீத தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கு பொற்கிழி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து மாணவர்களின் உரை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரிய – ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி உயர்நிலை உதவி தலைமை ஆசிரியர் கோ காமராஜ் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *