அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தெற்கு பள்ளியில் நடைபெற்ற 75 வது குடியரசு தின விழாவில் ஐந்தாம் வகுப்பு மாணவன் ஐந்து நிமிடம் அசத்தலாக ஆங்கிலத்தில் உரையாற்றி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்(தெற்கு)
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்
75ஆவது குடியரசு தினவிழாவில் ஐந்தாம் வகுப்பு மாணவன் நித்தின் ஐந்து நிமிடம் சிறப்பாக ஆங்கிலத்தில் பேசி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் மற்றும் வட்டார கல்வி அலுவலர் மதலைராஜ் முன்னிலையில் ஏழை குடும்பத்தில் பிறந்து தாய் தந்தையர் தின கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில் அவர்களது மகன் அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவர் நித்தின் அனைவரின் முன்னிலையிலும் அசத்தலான ஆங்கில மொழி பேச்சு அனைவரின் கவனத்தை ஈர்த்தது இதில் மாணவரது பெற்றோர் எழுத்தறிவற்ற தினக்கூலி என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவருக்கு பயிற்சியளித்து ஊக்கப்படுத்திய பள்ளியின் தலைமை ஆசிரியர் சொ.கருணாநிதி அவர்களை பலரும் பாராட்டி மகிழ்ந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *