பாபநாசம் அருகே
அய்யம்பேட்டையில் 1000-ம் வருட பாரம்பரிய கௌரி அம்மன் திருவிழா கோலாட்டப் பண்டிகை..

500-க்கும் மேற்பட்ட கன்னிப்பெண்கள் பங்கேற்பு..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டையில் கௌரி அம்மன் திருவிழா கோலாட்ட பண்டிகை வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.

பட்டு சாலிய பஜனை மடத்தில் முழுவதும் பெண்களால் கௌரிஅம்மன் மற்றும் கங்காதேவி அம்மனுக்கு பிரதிஷ்டை நடைபெற்றது. தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட கன்னிப்பெண்கள் கலந்து கொண்டு கோலாட்டம் அடித்து வழிபாடுகள் செய்தது கண்கொள்ளாக் காட்சிகளாக அமைந்திருந்தது. சுவாமிகள் வீதி உலா மேளதாளங்கள் பாண்டு வாத்தியங்கள் முழங்க, நான்கு ராஜ வீதிகள் வழியாக வலம் வந்தது. பின்னர் குடமுருட்டி ஆற்றில் சுவாமியின் மங்கள பொருள்களை கரைத்து மகா அபிஷேகம் நடைபெற்று மீண்டும் பஜனை மடத்தை வந்து அடைந்தது.

பட்டு சாலிய தெலுங்கு மக்களால் சுமார் 1000-ஆம் வருட பாரம்பரிய விழாவாக இந்த கோலாட்டப் பண்டிகை நடைபெற்று வருவதாக தெரிவிக்கின்றனர்.

பேட்டி..

சிவக்குமார்,
முன்னாள் செயலாளர்,
பட்டு சாலிய மகா சபை,
அய்யம்பேட்டை..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *