பருக்கல் ஊராட்சியில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட
பருக்கல் ஊராட்சியில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பருக்கல் ஊராட்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் அவர்களின் ஆலோசனைப்படி பருக்கல்ஊராட்சி மன்ற சேவை மையகட்டிட வளாகம் முழுவதும் நிழல் தரக்கூடிய வேம்பு, மகாகனி, தேக்கு, புளியன், பூவரசன், நெல்லி,
உள்ளிட்ட கனி மற்றும் நிழல் தரக்கூடிய 1000 மரக்கன்றுகளை நடுதல் செய்தனர். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் சி.பிரபாவதி சிவகுமார் தலைமை தாங்கினார்.
சித்தாமூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகர், முன்னிலை வகித்தார்.
இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜேஷ்,
ஊராட்சி செயலர் என்.மாரி, உட்பட வார்டு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.