திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வந்தவாசி வட்ட சட்டப் பணிக்குழு சார்பில் மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு முறைமைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ப.ஞானசம்பந்தன் தலைமை தாங்கினார். ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா. சீனிவாசன் வரவேற்றார்.

எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக், தொழிலதிபர் கவிஞர் அ.ஜா. இஷாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக, சப் இன்ஸ்பெக்டர் க.ராமு, வழக்கறிஞர் சா.இரா.மணி ஆகியோர் பங்கேற்று சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு தகவல்களை விளக்கி பேசினர்.

மேலும் சாலை விதிகளை அனைவரும் கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா கிளை நிர்வாகிகள் பிடிஜி ஆறுமுகம், மு.பிரபாகரன், வந்தை குமரன், அ.ஷாகுல் அமீது ஆகியோர் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினர். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சங்கர் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *