சென்னையில் பிப்ரவரி 7ந் தேதி மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைமை பொதுக்குழு

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்.எல்.ஏ தகவல் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைமைப் பொதுக்குழு சென்னை காமராஜர் அரங்கில் பிப்ரவரி 7ஆம் தேதி கூடுகிறது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு
மமக வின் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இப்பொதுக் குழுவில் விவாதிக்கப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்பார்கள். நாட்டின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய முடிவுகள் இப்பொதுக் குழுவில் தீர்மானங்களாக நிறைவேற்றப்படவுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *