பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல்துறை சார்பாக 35 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் அறிவுறுத்தலின் பேரில் ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் வழிகாட்டுதலின் படி ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சாஹிராபானு முன்னிலையில் 35 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதவிழா நடைபெற்றது
இதில் கார் ஓட்டுநர்கள் , ஆட்டோ ஓட்டுநர்கள் , ஓட்டுனர் சங்க ஊழியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு குறித்து தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும், நான்கு சக்கர வாகனத்தில் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் , சாலை விதிகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி பேசப்பட்டது சாலை விதிகள் குறித்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் நிகழ்ச்சியின் முடிவில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராமலிங்கம் நன்றி கூறினார் இந்நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.