சீர்காழியில் தமிழக வெற்றி கழகத்தினர் அம்பேத்கர் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்டதை கொண்டாடும் விதமாக மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கார்,பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.மேலும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி விஜய் மக்கள் இயக்கமாக இருந்த போது ஏழை, எளிய பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்துள்ளோம் என கூறி பொதுமக்களிடையே ஆதரவு கோரினர்.இதில் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *