தேசிய பாரா தடகள சேம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற மதுரை வீரர்களுக்கு பாராட்டு விழா.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் மூலமாக டெல்லியில் நடைபெற்ற கேலோ இந்தியா இந்தியா பாரா கேம்ஸ் மற்றும் கோவாவில் நடைபெற்ற 22 வது தேசிய பாரா தடகள சேம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் பெற்று தமிழ்நாட்டுக்கும் மதுரைக்கும் பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்கள் மனோஜ் F41 பிரிவில் குண்டு எறிதலில் தங்கப்பதக்கம் மற்றும் வெண்கல பதக்கம் பெற்றார்.
பிரசாந்த் F35 பிரிவில் குண்டு எறிதலில் தங்கப்பதக்கம் மற்றும் வெண்கலம் பதக்கம் பெற்றார். சந்தோஷ் குமார் F44 பிரிவில் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். கணேசன் f41 பிரிவில் குண்டு எறிதலில் வெண்கல பதக்கமும், முனிசாமி F53 பிரிவில் குண்டு எறிதலில் வெண்கல பதக்கமும்,பெற்று சாதனை புரிந்த வீரர்களுக்கும் பயிற்சி கொடுத்த மாற்றுத்திறனாளி
களுக்கான தடகளப் பயிற்சியாளர் ரஞ்சித் குமாருக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மதுரை மண்டல மேலாளர் செந்தில் குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, ஆகியோர் சாதனை புரிந்த விளையாட்டு வீரர்களுக்கு பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.