தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, கலைத் திருவிழாவில் மாநில அளவில் கணியன் கூத்து முதல் பரிசு வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா,
பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் தலைமையில் வெகு விமர்சியாக நடைபெற்றது.
இவ்விழாவில் தொழிலதிபர் மணிகண்டன். நெட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியன்,முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் சங்கர், பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் அருணாச்சலம், கல்வி ஆர்வலர் கணேசன், விவசாயி சங்க செயலாளர் வேலாயுதம், ஊர் நாட்டாமை பாண்டித்தேவர் ஆகியோர்
முன்னிலை வைத்தனர்.
பள்ளி முதுகலைகணித ஆசிரியர் அப்துல் காதர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் பள்ளி ஆசிரியர் நித்யா வரவேற்புரை ஆற்றினார் முதுகலை ஆசிரியர்ஷேக் நிஜாம் வாழ்த்தி பேசினார்.
ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் எம் திவ்யா மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கலைத் திருவிழாவில் மாநில அளவில் கணியன் கூத்து நிகழ்ச்சியில் முதல் பரிசு வென்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார்.
அதனையடுத்து பள்ளியில் கடந்த ஆண்டு பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் நடப்பு ஆண்டு
கல்வியிலும் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி வாழ்த்தி பேசினார்
இந்நிகழ்ச்சியில் அய்யனார்குளம் ஊராட்சி மன்ற தலைவர் நீதி ராஜன்,பள்ளி ஆசிரியர்கள் பொன்னுச்செல்வி, பொன்மணி,
முருகன், பாஞ்சாலி, பால்வண்ணநாதன், மருதுபாண்டியன், பவளக்கொடி, சகுந்தலா, பசும்பொன், சுந்தர், வள்ளி, லதா
ஷீலா , ஆர்டலின்பிறீடா,அய்யங்கனி,பிளாரன்ஸ்,
விஜய ஷீலா,எஸ்தர் ராணி மற்றும்பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பொதுமக்கள் ஏராளமானேர் கலந்து கொண்டனர்.
இவ் விழா முடிவில் பள்ளி துணை தலைமை ஆசிரியர் ஜாஸ்மின் ஹெலன் நன்றியுரை வழங்கினார்.
இறுதியில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.