வலங்கைமான் சேனியர் தெருவில் ஸ்ரீ ராம பவனத்தில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆலயம் அமைக்க கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனியர் தெருவில் உள்ள ஸ்ரீ ராம பவனத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆலயம் கட்ட வேண்டி கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது, அதே சமயம் அனைத்து இல்லங்களிலும் விளக்கேற்றி வழிபாடு செய்தனர், ஸ்ரீ ராம பவனத்தில் நடைபெற்ற பூஜை விழாவில் பக்தர்கள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ஆஞ்சநேயருக்கு புதிய ஆலயம் அமைய வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ ஆஞ்சநேயர் தாசர் என். ராமச்சந்திரன் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி தொண்டர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *