வில்லியனூரில் புதியதாக கட்டப்பட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா திறந்து வைத்தார்.
புதுச்சேரி அரசின் கூட்டுறவுத் பால் சொசைட்டி மூலம் ரூ. 4 லட்சம் மதிப்பில் வில்லியனூர் மட வீதியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, புதிய பால் உற்பத்தியாளர் சங்க கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் காளிதாஸ், செயலாளர் வெங்கடேசன், பரிசோதகர் அருண்குமார், அளவையாளர் ஜோதிலட்சுமி, உதவியாளர் திருவேங்கடம் மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன், ஆதிதிராவிட அணி அமைப்பாளர் செல்வநாதன், ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் கதிரவன், ஊசுடு தொகுதி செயலாளர் இளஞ்செழிய பாண்டியன், சபரிநாதன், சுப்பிரமணியன், திலகர், ரபிக், முஜி, மிலிட்டரி முருகன், கார்த்திகேயன், பாலமுருகன், முத்து, ஆலித், கோதண்டம், ராமஜெயம், அன்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *