தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது..
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ஸ்டேட் பேங்க் எதிரில் வெள்ளி கிழமை காலை 11 மணி அளவில் ஏஐடியுசி, சிஐடியூ, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், புதிய வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மையமாக்க கூடாது, விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் திருப்பத்தூர் நகர போலிசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது…