புவனகிரி செய்தியாளர் சக்திவேல்
புவனகிரி அருகே வடகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது
புவனகிரி
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் வடகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது
நிகழ்ச்சியில் புவனகிரி வருவாய் வட்டாட்சியர் தனபதி தலைமை தாங்கினார்.
ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி நாகராஜன் வரவேற்றார் சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் சார் ஆட்சியர் ரஷ்மி ராணி கலந்து கொண்டு தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் சிறப்புரையாற்றி 12, பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா 3, பயனாளிகளுக்கு வேளாண்மை துறை இடுபொருள் 2, பயனாளிகளுக்கு தோட்டக்கலை துறை மூலம் நாற்று 15, பயனாளிகளுக்கு மருத்துவத் துறை மூலம் மருத்துவ உபகரணங்கள் இரண்டு மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மகளிர் சுய உதவி குழு மூலம் சுயதொழில் தொடங்க கடன் திட்டம் என 34, பயனாளிகளுக்கு ரூபாய் 300, 42745 ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் முகாமில் பள்ளிக்கல்வித்துறை, கால்நடை மருத்துவத்துறை, மின்சாரத்துறை என அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் இறுதியாக புவனகிரி சமூகப் பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி நன்றியுரை ஆற்றினார்