திருப்பத்தூரில் 6 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சுற்றுலா மாளிகையை திறந்து வைத்த அமைச்சர் எ.வ‌. வேலு..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் தமிழக பொதுப்பணித்துறை சார்பில் 6 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சுற்றுலா மாளிகை திறப்பு விழா சனிக்கிழமை இன்று காலை 10.30 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை, திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜி, மாவட்ட சேர்மன் சூரியகுமார், மாவட்ட ஆவின் தலைவர் எஸ் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்து
கொண்டு புதியதாக கட்டப்பட்ட சுற்றுலா மாளிகையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, திருப்பத்தூர் சப் கலெக்டர் பானு, மாவட்ட திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, திருப்பத்தூர் நகர்மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆளும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *