புதுச்சேரி மாநிலம் பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் (சமகிரசிக்சா) சார்பில் வளர் இளம் பருவத்திற்கான கருத்தரங்கு நடைபெற்றது.
பள்ளியின் துணை முதல்வர் கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த கல்வித் திட்ட (சமகிரசிக்சா) பொறுப்பாசிரியர் அருண்பிரசாத் வரவேற்புரை வழங்கினார்.
தலைமையாசிரியர் வாணி , ஆங்கில விரிவுரையாளர் இரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். நல்லாசிரியர் முனைவர் வெற்றிவேல் நோக்கவுரை வழங்கினார்.
மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மன நலப் பிரிவு நிர்வாக இயக்குநர் மருத்துவர் பார்த்திபன் மற்றும் ஜகப்பிரியா ஆகியோர் மாணவிகளிடம் கலந்துரையாடல் செய்தனர்.
சுமார் இருநூற்று ஐம்பது மாணவிகள் பங்கேற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மணிகண்டன் மற்றும் இருபால் ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர். தமிழ் விரிவுரையாளர் சிவகாமி நன்றி கூறினார்.