வி தங்கப்பிரகாசம் செய்தியாளர் புதுச்சேரி
திருவள்ளுவர் சிலைக்கு பிரஞ்சு பள்ளி மாணவிகளுடன் மாலை அணிவித்து மரியாதை
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட நாளை முன்னிட்டு 20-2-24 செவ்வாய்க்கிழமை காலை 9 -30 மணிக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வு நடைபெற்றது.
தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் வி முத்து தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஃப்ரெஞ்ச் பள்ளியின் மாணவ மாணவிகள் 40 பேர் கலந்து கொண்டு கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தி திருக்குறள் நினைவு கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கலந்து கொண்ட அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் புதுவை தமிழ் சங்கத் தலைவர் முனைவர் முத்து திருக்குறள் புத்தகம் வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்க செயலாளர் சீனு.மோகன்தாஸ், முன்னாள் தமிழ் சங்க செயலாளர் கவிஞர் மு பாலசுப்பிரமணியன், பொருளாளர் அருள் செல்வம், துணைத் தலைவர் திருநாவுக்கரசு, ஆட்சிக்குழு உறுப்பினர் கவிஞர் ஆரா, மற்றும் பலர் கலந்து கொண்டு திருக்குறள் கூறி திருவள்ளுவர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்தனர்.