மதுரையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக்கிளையின் 14-வது அமைப்புத் தேர்தல் தேர்தல் ஆணையர்களான சகாய தைனேஸ் மற்றும் முத்துப்பாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது.

மாவட்டத்தலைவராக முருகேசன் , மாவட்டச் செயலாளராக சீனிவாசன் , மாவட்டப்பொருளாளராக எமிமாள் ஞான செல்வி , மாநில செயற்குழு உறுப்பினராக முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக அருள்தாஸ், ஹெலன் தெரேசா, ஜெயசித்ரா ஆகியோரும் மாவட்டத்துணைத் தலைவர்களாக ராஜமாணிக்கம், பாண்டிமாதேவி, அமலி ஆகியோரும், மாவட்டத்துணைச் செயலாளர்களாக வாசுதேவன், மணிமேகலை, சங்கர் ஆகியோரும், திருமங்கலம் கல்வி மாவட்ட நிர்வாகிகளாக ஞானசேகரன், தனபாக்கியம் ஆகியோரும், மதுரை கல்வி மாவட்ட நிர்வாகிகளாக சிவக்குமார், ரீட்டா ஆகியோரும் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்தல் முடிவில் தேர்தல் ஆணையர்கள் முன்னிலையில் மாவட்டத்தலைவர் முருகேசன் அவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். மற்ற நிர்வாகிகள் அனைவரும் மாவட்டத்தலைவர் முருகேசன் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

புதிதாக பொறுப்பேற்ற வட்டார நிர்வாகிகளை வாழ்த்தி தேர்தல் ஆணையர்கள் சகாய தைனேஸ், முத்துப்பாண்டியன், மாநிலச்செயலாளர் முருகன், மாநிலத்தலைவர் மணிமேகலை ஆகியோர் பேசினர். இறுதியாக மாவட்டப்பொருளாளர் எமிமாள் ஞான செல்வி நன்றி கூறினார்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இயக்க மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *