வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் திருக்கோயில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் திருக்கோவில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு விழா நடைபெற்றது, அதனை முன்னிட்டு காலையில் அம்மன் உள்பட அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கணபதி ஹோமம் உள்ளிட்ட ஓமங்கள் நடைபெற்றது.
பகல் 12 மணி அளவில் அபிஷேக ஆராதனையும், தீபாராதனையும் நடைபெற்றது, பக்தர்களுக்கு அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலை ஆறு மணி அளவில் அம்பாள் அன்ன வாகனத்தில் வீதி உலா காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஓமம் பூஜைகளை திப்பிராஜபுரம் ஜெகன் சிவாச்சாரியார் மற்றும் ஆலய அர்ச்சகர் குமார் சிறப்பாக செய்து இருந்தனர். விழா ஏற்பாடுகளை செட்டித்தெரு நிர்வாகிகள், செட்டித் தெருவாசிகள் மற்றும் ஸ்ரீ சீதளாதேவிஇளைஞர் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.