தென்காசி மாவட்டம் ஆலங்குளம் 8-வது வார்டு கிராமச்சாவடி முதல் ஆர்.சி. சர்ச் வரை ரூபாய் 30 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை
சிறப்பு நிலை பேரூராட்சி 8-வது வார்டு உறுப்பினர் அன்னக்கிளி ராஜதுரை தலைமையில்
நடைப்பெற்றது..
இந்த விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமி பூஜையினை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் முன்னாள் வார்டு உறுப்பினர் ராஜதுரை, வார்டு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ்,
பேரூராட்சி இளநிலை உதவியாளர் சங்கர சுப்பிரமணியான்,மற்றும் அலுவலக பணியாளர்கள்,
அருள்ராஜ் ,லெட்சுமணன்,எபினேசர், கண்ணன்
தொழில் அதிபர்கள் செல்வராஜ்,பொன்னுச்சாமி செல்வா, அருள்ராஜ், கனி, சார்லஸ், மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.