புதுச்சேரியில் மாசி மக தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் மற்றும் புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம், அகில இந்திய சட்ட விழிப்புணர் இயக்கம் சார்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாசி மக தீர்த்தவாரி திருவிழா அன்னதான நிகழ்ச்சியை சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் அவர்கள் துவக்கி வைத்தார்கள். சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் புதுச்சேரி மாநில தலைவர் சமூக சேவகர் ரவி ஜான் அவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்.

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பி.ஆர்.ஓ மற்றும் புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்க நிறுவன தலைவர் டாக்டர் மனோகர், புதுச்சேரி பத்திரிகையாளர் சங்க தலைவர் கலைச்சுடர் கா. பாரதி , சமூக விழிப்புணர்வு இயக்கம் மாநிலத் தலைவர் டாக்டர் . வி. ஆர். ராஜ்குமார் அவர்கள், புதுச்சேரி பத்திரிகையாளர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயபால்., மாநில துணைத்தலைவர் முருகவேல் , துணைச் செயலாளர் தங்கப்பிரகாசம் ,பி.ஆர் .ஓ. ஹரிதாஸ் , சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் புதுச்சேரி மாநில துணைத்தலைவர்கள் ஹரி கிருஷ்ணன் மற்றும் சிவா, சட்ட ஆலோசகர் நோட்டரி பப்ளிக் அட்வகேட் கோபி , மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் , மாநில இளைஞரணி தலைவர் ஹானஸ்ட் ராஜ் , மாநில துணைத்தலைவர் வினோத் , மாநில மாணவர் அணி தலைவர் கலைவாணன் , மாநில தொழிற்சங்க அணி தலைவர் பரமசிவம் , மாநில இளைஞரணி துணை செயலாளர் கோகுலகிருஷ்ணன், மற்றும் சுரேஷ், திலீபன், அபேல் என்ற வேளாங்கண்ணி, ரமேஷ் , சதீஷ் ,அந்துவான், கோவிந்த சாலை முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். மற்றும் புதுச்சேரி மாநில சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் மாநில நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் புதுச்சேரி பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் அகில இந்திய சட்ட விழிப்புணர்வு இயக்கம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *