அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்தநாள் விழா அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நகரச் செயலாளர் முரளி தலைமையில் வெகு விமர்சையாக இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் புரட்சித்தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்தநாள் விழா அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் ஆணைக்கிணங்க, அரியலூர் மாவட்ட கழக செயலாளர் துரை. மணிவேல் அறிவுறுத்தலின்படி ஜெயங்கொண்டத்தில் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு ஜெயங்கொண்டம் நகரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர், இந்நிகழ்வில் மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் சேதுராமன் மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணைச் செயலாளர் எஸ் ராஜ்குமார் அரியலூர் மாவட்ட கழக பொருளாளர் பொன்முடி,ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சிவ.கனகசபை, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் அம்மா பேரவை இளங்கோ.இளவழகன், இலக்கிய அணி டாப் 10 விஜயகுமார்,வர்த்தகரணி வேல்முருகன்,அம்மா தொழிற்சங்க பேரவை செல்வகுமார், சிறுபான்மையினர் நலப் பிரிவு ஹுமாயூன் பாஷா, நெசவாளர் அணி சண்முகம்,மற்றும் வேல்முருகன் பிள்ளை, அருணா சிவசங்கரன்,பழ.சுதாகர்,துரைசாமி,ராமநாதன்,கணேசன், கலியமூர்த்தி,மற்றும் ஒன்றிய கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் நகர கழக நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள் நகர சார்பு அணி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *