அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் ஓபிஎஸ் அணி சார்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு டிடிவி அணி சோழவந்தான் தொகுதி பொறுப்பாளரும் அலங்காநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வழக்கறிஞர் கோடீஸ்வரன் மேற்கு ஒன்றிய செயலாளர் சம்பகுளம்ரகு, நகர செயலாளர் ராஜபிரபு, மற்றும் ஓபிஎஸ் அணி ஒன்றிய செயலாளர்சேதுசீனிவாசன், துணை செயலாளர் வீரமலை, ஆகியோர் இணைந்து குமாரம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்
இதனை தொடர்ந்து கோட்டைமேடு பண்ணகுடி ஒத்தவீடு சம்பகுளம் உள்ளிட்ட கிராமங்களில் இரண்டு கட்சி நிர்வாகிகள் புரட்சித்தலைவி அம்மா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் டிடிவி அணி தண்டலை மாதவன், மணியஞ்சி ஊராட்சி கழக செயலாளர் ராஜா, மற்றும் ரஞ்சித், பாலமுருகன், சுப்பிரமணி, ரமணன், செல்லப்பாண்டி, ஓபிஎஸ் அணி சார்பாக நகரச் செயலாளர்கள்
வெள்ளகங்கை, பாலமேடு இ.பா.சேகர், அய்யாவு, இலக்கிய அணி சேகர் ஆட்டோ அழகர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..