தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் மருதம்புத்தூர் ஊராட்சியில்
ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து
ரூபாய் 12.00 இலட்சம் மதிப்பிட்டில்
புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது
அதன் திறப்பு விழா மருதம்புத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் எம் பூசத்துரை தலைமையில் நடைப்பெற்றது ஊராட்சி மன்ற துணை தலைவர் .
கே ரெஜீனா கோடீஸ்வரன் முன்னிலை வகித்தார்.
ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர்
பி ஹெச் பி.மனோஜ் பாண்டியன் விழாவில் கலந்து புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்
இவ்விழாவில் புதுப்பட்டி ஊராட்சி மன்றதலைவர் பால்விநாயகம்,மருதம்புத்தூர் வார்டு உறுப்பினர் சேர்மன் ராஜா, அரசு ஒப்பந்தாரர் கண்டப்பட்டி பாஸ்கர், மற்றும் ஊர் பொது மக்கள், கழக நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.