வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரம் சிமிலிமேட்டு தெருவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் வருகிற 6-ம் தேதி மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரம், சிமிலி மேட்டு தெரு மெயின் ரோட்டில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் வருகின்ற 6-ம் தேதி கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, வருகின்ற 4-ம் தேதி மாலை 7- மணிக்கு விநாயகர் வழிபாடு, எஐமான சங்கல்பம் உள்ளிட்ட பூஜைகளுடன் தொடங்குகிறது.
5-ம் தேதி காலை 8.30- மணிக்கு விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், நவக்கிரகம், மகாலட்சுமி ஹோமம், புனித நீர் எடுத்தல் நிகழ்ச்சியும் மாலை 5- மணிக்கு விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், ஆச்சாரியா வர்ணம், பூர்வாங்கம், யாக பூஜைகள், ஹோமம், தீபாராதனை காலம்- 1, 6-ம் தேதி காலை 7- மணிக்கு யாக பூஜைகள், 9- மணிக்கு தீபாராதனை காலம்- 2, காலை 10- மணிக்கு விமான கும்பாபிஷேகம், 10.30 மணிக்கு மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து காலை 11-மணிக்கு அருட்பிரசாதம், அன்னதானம் வழங்குதல். மாலை 6:00 மணிக்கு மகா அபிஷேகமும் நடைபெறுகிறது.
யாகசாலை பூஜைகளை சர்வ சாதகம் விசலூர் சிவஸ்ரீ கங்காதர சிவாச்சாரியார், ஆலய அர்ச்சகர் வலங்கைமான் இராஜ. பால மாரியப்பன் ஆகியோர் செய்கின்றனர். இந்த கும்பாபிஷேக விழா திருக்கயிலாய ஸ்ரீ கந்த பரம்பரை சூரியனார் கோவில் ஸ்ரீ வாமதேவ சிவாக்கிரக யோகிகள் ஆதீனம் 28 வது மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சார்யா சுவாமிகள் முன்னிலையில் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை ஆலய தக்கார் அ.ரமேஷ், ஆலய ஆய்வாளர் கே.மும்மூர்த்தி, அறங்காவலர் எஸ்.சம்பத் மற்றும் கிராமவாசிகள், திருப்பணி விழா குழுவினர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.