தென்காசி மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பாக பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு மற்றும் உணர்திறன் பயிற்சி பட்டறை கடையம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் வைத்த நடைபெற்றது.

வட்டார சமூக நல விரிவாக்க அலுவலர் (மகளிர்) வசந்தி கலைச்செல்வி வரவேற்புரை வழங்கினார்கள். இப்பயிற்சியில் பெண் குழந்தைகள் கல்வி மற்றும் பாதுகாப்பு, பெண்களுக்கான உதவி எண் 181 பற்றி சகி- ஒருங்கிணைந்த சேவை மைய ஆலோசகர் ராஜம்மாள் எடுத்துரைத்தார்.

பெண் குழந்தைகள் உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டம் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கபட்டது. மேலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி முக்கியத்துவம் தொடர்பான உறுதிமொழி எடுக்கபட்டது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் உதவி எண்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி கூறப்பட்டது. அதனை தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டு பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்ட விளக்க துண்டு பிரசுரங்கள் ஒன்றிய குழு தலைவர் செல்லம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமலை முருகன் மற்றும் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

பள்ளி கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், காவல்துறை, ஊரக வளர்ச்சி துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மகளிர் திட்டம் மற்றும் பொது சுகாதாரதுறை சார்பாக பெண் குழந்தைகள் கல்வி மற்றும் பாதுகாப்பு தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர். பயிற்சியின் நிறைவாக ஊர் நல அலுவலர் ஜுலியட் மேரி நன்றியுரை வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *