திருவாரூர் அருகே மெடிக்கல் ( ஆங்கில மருந்து கடை) கடையின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுப்பட்ட மூவரை – துரிதமாக செயல்பட்டு கைது செய்த இரவு ரோந்து பணி காவலர்கள் வடபாதிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் .சேகர் மற்றும் காவலர் சுந்தர் ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போதுதிருவாரூர், மாவூர் கடைத்தெரு அன்னை மெடிக்கல் கடையின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுப்பட்ட திருவாரூர் விஜயபுரம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ரவி மகன் பிரவீன் (வயது-23) திருவாரூர் அலிவலம் பகுதியை சேர்ந்த சாய சுந்தரம் மகன் மூர்த்தி (வயது-20) மற்றும் ஒருவரை மிக சாதுர்யமாக செயல்பட்டு இரவு ரோந்து பணி காவலர்கள் கைது செய்தனர்

அவர்களிடமிருந்து ரூ.1,000/- ரொக்கம் மாத்திரைகள் மற்றும் திருட்டிற்கு பயன்படுத்திய மாருதி ஆமினி வேன் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

மேலும், திருட்டில் தொடர்புடைய இருவரை பிடிக்க திருவாரூர் தாலுக்கா காவல் ஆய்வாளர் சுப்பிரியா தலைமையிலான தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் சிறப்பாக செயல்பட்டு, சாதுர்யமாக மேற்படி நபர்களை கைது செய்த வடபாதிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் மற்றும் காவலர் சுந்தர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்

எபொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திருட்டு வழிப்பறி கொள்ளை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயகுமார் மிக கடுமையாக எச்சரித்துள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *