வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்…

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின்10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் துவங்கியது.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளது. இதனையொட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்டத்தலைவர் கோபி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். தமிழ்நாடு மத்திய செயற்குழு உறுப்பினர் ராம்குமார் வரவேற்றுபேசினார்.

மாவட்டச்செயலாளர்முகைதீன் அப்துல் காதர் கோரிக்கை களை விளக்கி பேசினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கபொதுச்செயலாளர் ஆ.செல்வம் சிறப்புரையாற்றினார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவர் முருகையன் நிறைவுரையாற்றினார் மாவட்டப்பொருளாளர்முத்துப்பாண்டியன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச்செயலாளர் க.நீதிராஜா , மாவட்ட இணைச்செயலாளர் பரமசிவன், மாநில செயற்குழு உறுப்பினர் இரா.தமிழ் , வட்டக்கிளை நிர்வாகிகள் சிவகுரும்பன் ,
சிவபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *