பாபநாசம் அருகே அரையபுரம், தட்டுமால் படுகை விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பட்டா வழங்க தாமதமாகும் பட்சத்தில்…

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என மூன்றாம் நாள் நடைபெறும் போராட்டத்தில் விவசாயிகள் அறிவிப்பு.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அரையபுரம் தட்டுமால் படுகையில் 25-ஆண்டுகளாக வசிக்கும், சாகுபடி செய்து வரும் 350-விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி உடனடியாக
ரயத்து வாரியாக மாற்றம் செய்து விவசாயிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி பாபநாசம் அரசலாறு முனீஸ்வரர் கோயில் வளாகத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சாமு.தர்மராஜ் தலைமையில் மூன்றாம் நாளாக இன்று விவசாயிகள் சமையல் செய்து சாப்பிட்டு, உண்டு உறங்கி, கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டா வழங்க அரசு தாமதிக்கும் பட்சத்தில் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளே குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *