தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தென்காசி வருகை தந்த அவரை தென்காசி மாவட்ட ஊராட்சி மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் டி கே பாண்டியன் தலைமையில் சத்யராஜ், கல்லூரணி ராம்குமார், சந்திரசேகர் ஆகியோர் கடந்த இரண்டரை வருடங்களாக ஊராட்சி மன்றங்களுக்கு தேவையான பல் வேறு கோரிக்கை மனுக்களை தமிழக முதல்வர், உள்ளாட்சி துறை அமைச்சர், முதன்மை செயலர், இயக்குனர் ஆகியோர்களுக்கு பல முறை அனுப்பிய மனுக்களுக்கு எந்த ஒரு பதிலும் இல்லை

தாங்கள் தமிழக முதல்வரிடம்
தமிழக ஊராட்சி மன்ற தலைவர் களுக்காக பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற பரிந்துரை செய்ய வேண்டுமென கோரிக்கை மனுக்களை அளித்து எடுத்து கூறினார்கள்.

மனுவை பெற்று கொண்ட பீட்டர் அல்போன்ஸ் கூறும் போது முதல்வரை சந்தித்து உராட்சி மன்ற தலைவர்களின் கோரிக்கைகளை துறை சார்ந்த அமைச்சரின் சந்தித்து எடுத்து கூறி நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வராஜ். கிழங்காடு மணி மற்றும் காங்கிரஸ் திமுக கழக நிர்வாகி கள் பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *