நல்லூர் சிஎஸ் ஐ ஜெயராஜ் அன்னப்பாக்கியம் கல்லூரியில் வளர் இளம் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்

ஆலங்குளம் அருகே
நல்லூர் சிஎஸ் ஐ ஜெயராஜ் அன்னப்பாக்கியம் கல்லூரியில் வளர் இளம் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்

வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மங்கள நாயகி தலைமையில்
நடைப்பெற்றது.

ஆலங்குளம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் ஆனந்த லெட்சுமி,நல்லூர் கிராம சுகாதார செவிலியர் மணிமேகலை,ஆகியோர் முன்னிலை வகித்தனர் நாட்டு நல பணி திட்ட அலுவலர் ஜோகன்னா வரவேற்புரை வழங்கினார்.

கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் ஜேசுஜெகன், மற்றும் கல்லூரி முதல்வர் வில்சன்,ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்து பேசினார்கள்.

இந்த முகாமில் வளரும் இளம் கல்லூரி பெண்களுக்கு சுத்தம், சுகாதாரம், ஊட்டச்சத்து , நவதானியங்கள்
பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த முகாமில் அங்கன்வாடி பணியாளர்கள்
சாரள்பொன்னுத்தாய்ஷோபியா, அர்ச்சனா, ரோஜா, ஜீவராணி, வசந்தா, ரோஸ்லின், மலர் விழி, சங்கரமீனாட்சி சுப்புலெட்சுமி, மற்றும் கல்லூரி மாணவிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

முடிவில் அங்கன்வாடி பணியாளர் சாந்தி பாக்கியம் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *