மதுரையில்
தமிழ்நாடு அரசு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்கத்தின் மாநில மையத்தின் முடிவின்படி பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்ட நடவடிக்கை மேற்கொள்வதென முடிவெடுக்கப்பட்டு நேற்று முதல் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிதல் தொழில்நுட்ப பணியிடங்களை சரண் செய்வது தடுத்திட நிர்வாக சீர்கேட்டினை சரி செய்திட பேச்சு வார்த்தையில் ஏற்றுக்கொண்ட அனைத்தையும் அமல்படுத்திட , நிர்வாகத்தில் அதிகாரங்களை பரவலாக்கி காலி பணியிடங்களை நிரப்பிட 06.03.2024 சென்னையில் மாபெரும் உண்ணாவிரதம் மார்ச் 11ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
மதுரையில் நடைபெற்ற கருப்பு பட்டை அணியும் போராட்டத்தினை மாநில துணை தலைவர் நடராஜன் தலைமை ஏற்று நடத்தினார் ,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மதுரை மாவட்டச்செயலாளர் க.நீதிராஜா வாழ்த்தி பேசினார். தமிழ்நாடு அரசு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மருதுபாண்டியன் சிறப்புரை வழங்கினர்.
தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை மாநில பொருளாளர் இரா.தமிழ் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் பரமசிவன் மற்றும் வட்டக்கிளை நிர்வாகிகள் ஞானபிரகாசம், சிவபாலன், பரந்தாமன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் முடிவாக தமிழ்நாடு அரசு புள்ளி இயல் சார்நிலை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கண்ணன் நன்றி கூறினார்.