கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அரசம்பட்டி இந்திரா நகரில் தேசிய மகாத்மா காந்தி ஊரக திட்டத்தின் கீழ் சுமார் 4.60 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜையை கே.பி.எம். சதீஷ்குமார் தொடங்கி வைத்தார்
இதில் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் பையூர் ரவி, முன்னாள் கழக ஒன்றிய செயலாளர் எம் எஸ் பிரபாகரன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பனந்தூர் பழனிச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் பி.பி.சிவலிங்கம், விவசாய அணி ஒன்றிய செயலாளர் கணேசன், மீனவர் அணி ஒன்றிய பொருளாளர் ரவி, உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.