தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டம் வீராணம் அரசினர் மேனிலைப் பள்ளியில்
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழநிநாடார் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 40 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைப்பெற்றது
ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலரும் மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளருமான ஷேக் முகமது தலைமை தாங்கினார்.
ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்பி எம் அன்பழகன் வீராணம் ஊராட்சி மன்ற தலைவர்
அ. வீரபாண்டியன் ஒட்டுநர் அணி துணை அமைப்பாளர் அமனுல்லா, காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவர் கணேசன் ஆகியோர்
முன்னிலை வைத்தனர்.
வீராணம் திமுக கிளை செயலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார் தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்கள்
நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் இருதலய மருதப்பபாண்டியன். மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கணேசன்,
ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்
அன்சர் அலி,ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் அப்தூல்வகாப்,இளைஞர் அணி நிர்வாகி பாலமுருகன்,முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய பிரதிநிதி வெள்ளத்துரை,காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் முத்துலிங்கம், வீராணம் முருகையா, பாஸ்கர், பால்(எ) சண்முகவேல் திமுக
கிளை அவைத் தலைவர் முஸ்தபா, கமல், வீராணம் மீரான் ஊசேன்,அரசு ஒப்பந்ததாரர் மாரியப்பன்,
அரசு பள்ளி ஆசிரியர்கள் அருணாசலம்,
ஜூலியட் கலா, ஆரோக்கியராஜ்,சாந்தி, குமார் மற்றும் ஆசிரியை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் திமுக கழக நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உள்பட பலர் உடனிருந்தனர்.