பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளில்..
மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் மாநில அளவிலான கலைத்திருவிழா, சிலம்பம், திறனாய்வுதேர்வு, உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு முஹம்மது நஜிப், அக்பர், நூர் முகம்மது, மில்டன்ராஜ் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி சிறபப்புரையாற்றினர். இதில்அய்யம்பேட்டை சுற்றியுள்ள பல்வேறு அரசியல் இயக்கங்களை சேர்ந்தவர்களும், சமூக ஆர்வலர்களும் என பலர் கலந்து கொண்டனர் இதில் ஆட்டம் பாட்டங்களுடன் மாணவ மாணவிகள் நடத்திய பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சி காண்போரை கவரும் வண்ணம் இருந்தது.