மதுரை கே.கே. நகரில் விஷன் எம்பவர் சார்பாக அறிவியல் கண்காட்சி பார்வைத்திறன் குறைந்தோருக்கான அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
பார்வைத்திறன் குறைந்தோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.அறிவியல் மற்றும் கணிதத் துறைகளில் வருங்காலங்களில் பார்வையற்ற மாணவர்களும சிறந்த முறையில் சாதிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு விஷன் நிறுவனம் செயல்படுகிறது.
பார்வைத்திறன் குறைந்தோருக்கான அறிவியல் கண்காட்சியை அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல் இடைநிலை ஆசிரியர்கள் நாகசுந்தரி, அ.ராஜா, மற்றும் சு.ஆனந்தி. கணினி பயிற்றுநர் ஆகியோர் துவக்கி வைத்தனர். விலும் எம்பவர் நிறுவனத்திலிருந்து சிறப்புக் கல்வி ஒருங்கிணைப்பாளர் யுவராஜ் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வாக
அறிவியல் சோதனைகள், கணித செயல்பாடுகள் மற்றிம் கணக்கீட்டு சிந்தனையை வளர்க்கும் விளையாட்டுகள் ஆகியவற்றைப் பற்றி பார்வைக் குறைபாடுடைய மாணவர்கள் பார்வைத்திறன் உள்ள மாணவர்களுக்கு விளக்கிக்கூறியுள்ளார், மதுரை அன்னை சத்யா அரசினர் குழந்தைகள் ஆரம்பப்பள்ளியில் இருந்து
மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் மாணவர்கள் செய்த அறிவியல் சோதனைகள், கணித செயல்பாடுகள் மற்றும் கணக்கீட்டு சிந்தனை விளை யாட்டுகளை கண்டு வியந்து பாராட்டினர். பார்வையுள்ள மாணவர்களுக்கு, பார்வைத்திறன் குறையுடைய மாணவர்கள் கற்றுத்தருவது மிகப்பெரிய சாதனை என்றும் கூறினர்.
அதனைத் தொடர்ந்து “நெகிழிப்பையை ஒழிப்போம், துணிப்பைகளை பயன்படுத்துவோம்’ என்ற விழிப்புணர்வு நடனமும், 5 ம் வகுப்பு மாணவர்கள் மூலம் “மரம் வளர்ப்பது குறித்த நாடகமும்,6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களால் சரி விகித உணவின் அவசியம்” குறித்த நாடகமும் நடித்துக் காட்டப்பட்டது.
பின்னர் நெருப்பில்லா சமையலின் கீழ் பல்வேறு விதமான உணவுப் பொருட்களை பார்வைத்திறனற்ற மாணவர்கள் பிற மாணவர்களுக்கு செய்து காட்டி ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கிக் கூறினர். இறுதியில் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.