சீர்காழி போக்குவரத்து காவல்துறை சார்பாக வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியில் வாகன போக்குவரத்து அதிகரிப்பால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின்படி சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் அறிவுறுத்தலின்படி, சீர்காழி போக்குவரத்து உதவி ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் போக்குவரத்து காவல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைகவசம் கட்டாயம் அணிய வேண்டும், மதுபோதையில் இரு சக்கர வாகனம் ஓட்டக்கூடாது,

வாகன ஓட்டிகள் போக்குவரத்து தானியங்கி செய்கைகளையும், போக்குவரத்து காவலர் செய்கைகளையும் பின்பற்ற வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது. சாலை விதிகளை மீறினால் விலைமதிப்பற்ற உயிரை இழக்க நேரிடும். தலை கவசம் அணியாதவர்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும், ஆட்டோ ஒலிபெருக்கியின் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் தொடங்கி வைத்தார்கள்.


மேலும் சாலையில் சென்ற தலைகாசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து உதவி ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வு பற்றிய துண்டு பிரசுரங்களை வழங்கி அறிவுறுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ், தலைமை காவலர் செந்தில், உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *