திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது
திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் (06.03.2024) நடைபெற்றது. குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 51 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் கலந்துகொண்டனர். அவர்களிடமிருந்து 32 மனுக்கள் பெறப்பட்டது.

மேலும், கூட்டத்தில் இரண்டு பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை.75,000. ஒரு பயனாளிக்கு கண் கண்ணாடிக்கான நிதியுதவியாக 4,000-ம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ அவர்களால் வழங்கப்பட்டது

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் சி.மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *