துச்சேரியில் கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் PPP பிரகாஷ் வலியுறுத்தல்

புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி ஆர்த்தியின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் மற்றும் கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று புதுச்சேரி தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் PPP. பிரகாஷ் வலியுறுத்தியுள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த நாராயணன்- மைதிலி இணையரின் மகள் சிறுமி ஆர்த்தி கடந்த 02.032024 அன்று தனது வீட்டின் அருகிலேயே காணாமல் போன நிலையில் 05.03.2024 அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முத்தியால்பேட்டை சிறுமி ஆர்த்தி கடத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்

வட மாநிலங்களில் பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் குற்ற சம்பவங்களை போல புதுச்சேரியிலும் நடைபெற்று வருவது அதிர்ச்சியை அளிக்கிறது. புதுச்சேரியில் அதிக அளவில் பரவி இருக்கும் கஞ்சா கலாச்சாரத்தால் சிறு வயதில் போதைக்கு அடிமையாகி ஆர்த்தி என்ற சின்னஞ்சிறு பிள்ளையைக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கயவர்களின் மனநிலை மிருகத்தை விட மோசமானது

இத்தகைய கொடூர காட்டுமிராண்டிகளை அரசு என்கவுண்டர் அல்லது தூக்கிலிட வேண்டும் இத்தகைய கடுமையான தண்டனைகளை கொடுத்தாலும் அச்சிறுப் பிள்ளையை இழந்து துடிக்கும் குடும்பத்திற்கு ஆறுதல் செய்திடவும் முடியாது இருப்பினும் இவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையை பார்த்து இனி எம் சகோதரிகளை யாரும் நெருங்குவதற்க்கே அஞ்ச வேண்டும் கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும புதுச்சேரி பொதுமக்கள் இடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை புதுச்சேரி அரசு போக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *