தேனி மாவட்டம் பெரியகுளம் “வேலன் வாழும் கலைக்கூடம்”லோக கலா ஸ்ரீ உ. சுந்தர வடிவேலன்,மற்றும் கலை வளர்மணி உ.திருநாவுக்கரசு அவர்களிடம் சிலம்பம் பயின்ற, தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை, நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வடபுதுபட்டியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி த.சோனாலி க்கு தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறை மூலம் வழங்கப்படும் 18 வயது உட்பட்டோருக்கான சிலம்பத்தில் உயரிய விருதான மாவட்ட அளவில் சிறந்த சிலம்பாட்ட கலைஞர் என்ற பொற்கிழி விருதையும் “கலை இளமணி” என்ற பட்டத்தையும் தேனி மாவட்ட இரண்டாம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இருந்து பெற்றார்.

விருது பெற்ற சோனாலிக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள்,சமூக ஆர்வலர்கள், மற்றும் சக சிலம்ப வீரர் வீராங்கனைகள் பாராட்டு தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *