வலங்கைமானில் தமிழக முன்னாள் நிதி அமைச்சர் க. அன்பழகனின் நான்காவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள நகர திமுக அலுவலகத்தில், தமிழக முன்னாள் நிதி அமைச்சர் க.அன்பழகனின் நான்காவது நினைவு நாளை ஒட்டி அன்னாரின் திருவுருவ படத்திற்கு, வலங்கைமான் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ. அன்பரசன் தலைமையில், வலங்கைமான் திமுக கிழக்குஒன்றிய செயலாளர் நரசிங்கமங்கலம் கோ. தட்சிணாமூர்த்தி, நகர செயலாளர் பா. சிவனேசன் ஆகியோர் முன்னிலையில், மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் வலங்கைமான் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க. தனித்தமிழ்மாறன்,நகர பொருளாளர் புருஷோத்தமன்,சிங்குத் தெரு எஸ்.ஆர். ராஜேஷ், தங்க.சிவராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், கட்சியினர்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *