புவனகிரி
கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை அமைதியாகவும் எவ்விதமான இடர்பாடுகளும் இன்றி நடத்திட பல்வேறு முன்னெடுப்பு பணிகளை செய்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக புவனகிரியில் டெல்லி விமான நிலையத்தில் இருக்கும் துணை ராணுவ படையினர் 62 பேர் நெய்வேலி என்எல்சி கேம்பஸில் தங்க வைக்கப்பட்டு அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கும் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அதன்படி புவனகிரிக்கு 62 பேர் வருகை தந்துள்ள நிலையில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே அச்சமின்றி நூறு சதவீத வாக்குறு பதிவு நிறைவேற்றுவதற்கும் இந்த அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த அணி வகுப்பானது புவனகிரி எம்ஜிஆர் சிலையில் இருந்து கடைத்தெருக்களின் முக்கிய வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு வந்து அடைந்தது.