ஜே .சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
2024 நாடாளுமன்றத் தேர்தல் தேமுதிக திருவாரூர் வடக்கு மாவட்ட வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழக திருவாரூர் வடக்கு மாவட்ட வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் திருவாரூர் நகருக்கு உட்பட்ட கீழ வீதியில் அமைந்துள்ள ஆர் வி கா தனியார் திருமண அரங்கில் நடைபெற்றது
ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் பொறியாளர் எம். சண்முகராஜ் தலைமை வகித்தார். தேமுதிக மாநில கழக வழக்கறிஞர் அணி துணை செயலாளர் ஜே. இராகவ் பிரகாஷ் மாநில கழக நெசவாளர் அணி துணைச் செயலாளர் எம். சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் செயல் வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்கள் தேர்தல் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் பொறுப்பாளர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் மேலும் ஒன்றிய நகர பேரூர் கழக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் வாக்குச்சாவடி கமிட்டி உறுப்பினர்கள் வாக்குச்சாவடி முகவர்கள் ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர் முன்னதாக திருவாரூர் நகரக் கழக செயலாளர் வழக்கறிஞர் ஜி. சதீஷ்குமார் வரவேற்றார் நிறைவாக திருவாரூர் ஒன்றிய கழக செயலாளர் வி. அருள் நன்றி கூறினார்