புவனகிரி

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையம் ஊராட்சிக்கு கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் தூய்மை போகியை சிறப்பாக வழிநடத்தி செயல்படுத்தியதற்காக மாவட்ட கூடுதல் கலெக்டர் சரண்யா கீரப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கீரனுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கினார்.

இந்நிலையில் பரிசு பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் அந்த பரிசினை தன்னோடு அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சமர்ப்பித்தார்

இது பற்றி கீரன் கூறுகையில் இந்த பரிசு கேடயமும் தூய்மைக்காக வழங்கப்பட்டது தூய்மை பணியாளர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் இல்லாமல் இந்த விருது சாத்தியமில்லை எனவே இந்த விருதினை அவர்களுக்கு சமர்ப்பிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார் மேலும் ஊராட்சி மன்ற தலைவரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *