வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி குரு ஸ்தலம் அருகில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவு உறுதிப்படுத்தும் விதமாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரங்கோலி மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவின் பேரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, வாக்காளர் கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக 29- நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி 169- நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி குரு ஸ்தலம் அருகில் 100%. வாக்குப்பதிவு வலியுறுத்தி ரங்கோலி மூலம், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வலங்கைமான் வட்டாட்சியர் ரஷ்யா பேகம், தேர்தல் துணை வட்டாட்சியர் ரவி, மண்டல துணை வட்டாட்சியர் ஆனந்தன், வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், ஆலங்குடி கிராம நிர்வாக அலுவலர் ஹரிகர சுதன், வட்டார மேலாளர் தனலட்சுமி, வட்டார ஒருங்கிணைப்பாளர் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.