உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மதுரையில் வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. மதுரை வைகை ஆற்றில் உள்ள மைய மண்டபத்தில் வைகை நதி குறித்து சொற்பொழிவும் வைகை தூய்மை பணியும், வைகையை பாதுகாப்போம் என்ற உறுதிமொழி ஏற்பும், காணாமல் போக இருக்கின்ற கண்மாய்களை அடையாளப்படுத்தி யும் நிகழ்ச்சி நடை பெற்றது.

இந்நிகழ்ச்சி வைகை ராஜன் தலைமையில் நடைபெற்றது. பிரஸ் கிளப் தலைவரும் ஜல்லிக் கட்டு ரோட்டரி கிளப் செயலாளருமான கதிரவன் , தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அண்ணாதுரை வைகை டிரஸ்ட் நிறுவனர் தலைவர் இந்தியன் ரிவர் நெட்வொர்க் ஜல்லிக்கட்டு ரோட்டரி கிளப் நிறுவனர். நெல்லை பாலு பிலிப் சுதாகர் தமிழ் மையம், பேராசிரியை கிறிஸ்டி கல்வியாளர் ஆழ்வார் ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.தலைவர் பார்த்தசாரதி நன்றி கூறினார். மதுரையில் உள்ள பள்ளி – கல்லூரி மாணவ மாணவியர்கலந்து கொண்டு உலக தண்ணீர் தினத்தில் வைகை நதியை மாசு படுத்த மாட்டோம். மாசு படுத்த அனுமதிக்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *