மதுரை வருவாய் மாவட்ட மேலூர் வட்டார அளவிலான ஜூனியர் ரெட் கிராஸ் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர் களுக்கான கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாம் மேலூர் அரசு இருபாலர் மேல்நிலைப்பள்ளியில் வைத்து இரு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. மாணவ மாணவியர்களும் ஆசிரிய, ஆலோசகர்களும் பங்கு பெற்று பயனுற்றனர்.
இம்முகாமை வட்டார கல்வி அலுவலர் அழகு மீனா
ரெட் கிராஸ் கொடியினை ஏற்றி துவக்கி வைத்தார்.
அரசு இருபாலர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனியாண்டி முன்னிலை வகித்தார்.சிறப்பு கருத்தாளர்களாக அறந்தாங்கி முனைவர் தமிழ்ச்செல்வன் வருகை தந்து பள்ளிகளில் ஜே.ஆர்.சி மாணவர்களின் பங்கு குறித்து சிறப்பான கருத்துக்களை வழங்கினார்கள் .மதுரை கல்வி மாவட்டம் இணை கன்வீனர் ஒலிவா ஜே.ஆர்.சி வரலாறு குறித்து தெளிவான விளக்கம் தந்தனர். மேலூர் கல்வி மாவட்ட பொருளாளர் நாகராஜன் மற்றும் தவமணி ஆகியோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பாடல் மூலம் ஜே.ஆர்.சி பற்றிய விழக்கினர் . இக்கூட்டத்திற்கான மாவட்ட ஜே.ஆர்.சி ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் செய்திருந்தார்