இவர் கடந்த 34 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் இருந்து வரும் மூத்த பத்திரிக்கையாளர் ஆவார். உலக செய்தி என்ற வார பத்திரிக்கை நடத்தி வரும் இவர் தற்போது வெற்றி குரல் என்ற புதிய நாளிதழை தொடங்கியுள்ளார்.

இதன் வெளியீட்டு விழா புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம் வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் வெற்றி குரல் தினசரி பத்திரிக்கையை புதுச்சேரி பத்திரிகையாளர் சங்க நிறுவனர் தலைவர் டாக்டர் மனோகர் அவர்கள் நாளிதழை வெளியிட்டு தொடங்கி வைத்தார்.

முதல் பிரதியை மூத்த பத்திரிகையாளர் வில்லங்கம் டிவி உரிமையாளர் அம்மா ஆறுமுகம், ரெயின்போ டிவி ஒளிப்பதிவாளர் அசோக் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக, சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் புதுச்சேரி மாநில தலைவர் சமூக காவலர் ரவி ஜான் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.

மேலும் விழாவில் புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் முருகவேல், புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் டைம்ஸ் ஆப் தமிழ்நாடு மாலை டைம்ஸ் இணையத்தின் செய்தி ஆசிரியர் ஹரிதாஸ் மற்றும் மக்கள் மொழி மீடியா உரிமையாளரும் புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கத்தின் அலுவலக தொடர்பாளருமான சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டு வெற்றி குரல் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் உரிமையாளர் தங்கப்பிரகாசத்தை வாழ்த்தினார்கள் முடிவில் அனைவருக்கும் தங்கப்பிரகாசம் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *